பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை பதவி விலகுமாறு அல்லது அவர் பதவி நீக்கம் செய்யப் போவதாக அறிவித்தல் விடுக்கப்படவில்லை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்று (28) இரவு நடைபெற்ற ஆளும் கட்சி கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்திலோ அல்லது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிலோ நெருக்கடியை ஏற்படுத்த விரும்பவில்லை எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளை தீர்ப்பதற்கு அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவதாகவும் அதற்கு அனைவரினதும் ஆதரவை பெற்றுக்கொள்ள வேண்டுமென ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
இடைக்கால அரச தொடர்பில் கூட்டத்தில் அமைச்சர்கள் மற்றும் எம்.பி.க்கள் பலரிடையே கருத்து மோதல் ஏற்பட்டதாகவும், இதனால் கூட்டம் சூடுபிடித்ததாகவும் தெரியவருகிறது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பெரும்பாலான அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் இதில் கலந்துகொண்டனர்.