26.4 C
Jaffna
March 29, 2024
குற்றம் மலையகம்

ஜேர்மன் யூடியூப் யுவதியிடம் அத்துமீற முனைந்து அறை வாங்கிய இளைஞர்கள் கைது!

கண்டியில் அண்மையில் ஜேர்மனியை சேர்ந்த யூடியூப் பெண் ஒருவரை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கிய மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தை அந்த பெண்ணும் அவரது அயர்லாந்து காதலனும் கமராவில் படம் பிடித்ததை அடுத்து சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

கண்டி சுற்றுலாப் பொலிஸாரால் நேற்று (24) கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் கட்டுகஸ்தோட்டை பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அயர்லாந்து – ஜேர்மன் ஜோடி கண்டி வீதியில் வியாழக்கிழமை (21) இரவு குறித்த நபர்களால் துன்புறுத்தப்பட்டனர்.

இந்த சம்பவத்தை ஜேர்மன் வோல்கர் மடோ என்பவர் வீடியோவாக பதிவு செய்து, பின்னர் அவர்களின் யூடியூப் சேனலான ‘க்ளென்&மேடோ’வில் பதிவேற்றம் செய்தனர். அது சமூக ஊடகங்களில் வைரலாக பரவியது.

இலங்கையின் சமூக ஊடக பயனர்கள் இந்த சம்பவத்தை கண்டித்துள்ளதுடன், சந்தேக நபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸாரை வலியுறுத்தியுள்ளனர்.

பொதுமக்களின் சலசலப்பைத் தொடர்ந்து, பொலிஸார் சந்தேக நபர்களைக் கண்டுபிடித்து அவர்களைக் கைது செய்தனர், அதே நேரத்தில் சம்பவம் குறித்து சிறப்பு விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

உயிரிழந்தவரின் நுரையீரலில் பல்

Pagetamil

சாரதி இலேசாக தூங்கி விட்டாராம்!

Pagetamil

விபச்சார விடுதியில் சிக்கிய 2 பெண்களுக்கு எயிட்ஸ்!

Pagetamil

மனைவியின் 15 வயது தங்கையுடன் குடும்பம் நடத்தி கர்ப்பமாக்கியவர் கைது!

Pagetamil

சட்டவிரோத மின்கம்பி வேலியில் சிக்கி ஒருவர் பலி

Pagetamil

Leave a Comment