தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் த.கலையரசனின் வாகனம் விபத்திற்குள்ளானது.
அம்பாறையிலுள்ள தனது இல்லத்திலிருந்து நேற்று (19) பாராளுமன்ற அமர்வில் கலந்து கொள்வதற்காக சென்று கொண்டிருந்த போது, விபத்து நிகழ்ந்தது.
குருணாகல் பகுதியில் இந்த விபத்து நிகழ்ந்தது. இதில் கலையரசனின் வாகனமும், பிறிதொரு வாகனமும் சேதமடைந்தன.
இதில் பாதிக்கப்பட்ட பெண்ணொருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
த.கலையரசனின் வாகன சாரதி, குருணாகல் பொலிசாரால் கைது செய்யப்பட்டார்.
இதையடுத்து, பேருந்தில் பயணித்து பாராளுமன்ற அமர்விற்கு கலையரசன் சென்றார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1