28.5 C
Jaffna
March 20, 2023
உலகம்

கால்ப்பந்து நட்சத்திரம் ரொனால்டோ தம்பதியின் பிறந்த ஆண் குழந்தை இறந்தது

பிரபல கால்ப்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு பிறந்த இரட்டைக் குழந்தைகளில் ஒன்று இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.

மான்செஸ்டர் யுனைடெட் கால்பந்து அணியின் நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு கிறிஸ்டியானோ ஜூனியர், மேடியோ என்ற 2 மகன்களும் ஈவா மற்றும் அலனா என்ற 2 மகள்களும் உள்ளனர்.

ரொனால்டோவின் மனைவி ஜெர்ஜினா ரோட்ரிக்ஸ் மீண்டும் கர்ப்பமாக இருந்தார். இரட்டைக் குழந்தைகளை எதிர்பார்ப்பதாக ரொனால்டோ ஜோடி தெரிவித்திருந்தது.

இரட்டைக்குழந்தைகள் பிறந்த நிலையில் அதில் மகன் இறந்துவிட்டதாக ரொனால்டோ தெரிவித்துள்ளார். பெண்குழந்தை நலமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ருவிட்டர் பதிவில், ‘எங்கள் ஆண் குழந்தை இறந்துவிட்டதை ஆழ்ந்த சோகத்துடன் தெரிவிக்கிறேன்.

எந்தவொரு பெற்றோரும் உணரக்கூடிய மிகப்பெரிய வலி இது. பெண் குழந்தை பிறந்தது மட்டுமே இந்த தருணத்தில் ஓரளவு நம்பிக்கையுடனும் மகிழ்ச்சியுடனும் வாழ வலிமை அளிக்கிறது. மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் கவனிப்பு மற்றும் ஆதரவிற்காக நன்றி தெரிவிக்க விரும்புகிறோம்.

இந்த இழப்பில் நாங்கள் அனைவரும் பேரழிவிற்கு ஆளாகியுள்ளோம், இந்த கடினமான நேரத்தில் தனிமையை கேட்டுக்கொள்கிறோம். எங்கள் மகனே, நீ எங்கள் தேவதை. நாங்கள் எப்போதும் உங்களை நேசிப்போம்’ என்று பதிவிட்டுள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
2

இதையும் படியுங்கள்

பொருளாதார நெருக்கடியின் எதிரொலி: கோழிப் பாதங்களை சாப்பிடுமாறு மக்களை கேட்ட எகிப்பு அரசு!

Pagetamil

சீன ஜனாதிபதி இன்று ரஷ்யா செல்கிறார்!

Pagetamil

உக்ரைனிற்கு திடீர் பயணம் மேற்கொண்ட புடின்!

Pagetamil

ஆபாசப்பட நடிகைக்கு பணம் வழங்கப்பட்ட விவகாரம்: ’21ஆம் திகதி என்னை கைது செய்யப் போகிறார்கள்’; ஆதரவாளர்களை உசுப்பேற்றும் ட்ரம்ப்!

Pagetamil

இம்ரான்கானின் வீட்டு முகப்பை உடைத்து சோதனை!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!