இலங்கையில் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு உதவ செஞ்சிலுவைச் சங்கம் நடத்தும் நிதித் திரட்டுக்கு ஆதரவாக சிங்கப்பூர் அரசாங்கம் 100,000 டொலரை வழங்குகிறது.
வெளியறவு அமைச்சு அதன் அறிக்கையில் இதனைத் தெரிவித்தது.
சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கம் இலங்கையில் உள்ள பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு மருந்தும் அத்தியாவசியப் பொருள்களும் வாங்க 100,000 வெள்ளி வழங்குவதாக முன்னதாக அறிவித்தது.
அரசாங்கம் வழங்கும் பணம் அதற்குக் கைகொடுக்கும்.
இலங்கை இப்போது மனிதாபிமான, பொருளியல் நெருக்கடியைச் சந்தித்து வருகிறது.
அந்நாடு முழுவதும் அத்தியாவசியப் பொருள்களுக்குப் பற்றாக்குறை நிலவுவதாக சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கத்தின் இணையத்தளம் தெரிவித்து.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1