26.4 C
Jaffna
March 29, 2024
இலங்கை

நாடு வழமைக்கு திரும்ப வேண்டி கிளிநொச்சியில் அமைதிவழி போராட்டம்!

நாட்டில் காணப்படும் பொருளாதார, அரசியல் நெருக்கடி நீங்கி அமைதியான நிலை ஏற்பட கிளிநொச்சியில் விசேட பிரார்த்தனையும், அமைதிவழி போராட்டமும் இன்று முன்னெடுக்கப்பட்டது.

வன்னி கிளிஸ்தவ ஒன்றியத்தின் ஏற்பாட்டில் குறித்த வழிபாடு இன்று பிற்பகல் 5 மணியளவில் கிளிநொச்சி நகரில் அமைந்துள்ள அங்கிலிக்கன் மிஷன் இலங்கை திருச்சபை முன்பாக இடம்பெற்றது.

நாட்டில் தற்பொழுது உள்ள நிலை மாறி, மக்களிற்கு அமைதியும், பொருளாதார நெருக்கடியற்ற நிலை உருவாக இறைவன் ஆசீர்வதிக்க வேண்டும் என தெரிவித்து குறித்த பிரார்த்தனையும், போராட்டமும் இன்று முன்னெடுக்கப்பட்டது.

பிரார்த்தனையில் ஈடுபட்டவர்கள் ஏ9 வீதியில் கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி பாடல் பாடி அமைதி வழி போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து திருச்சபையில் மெழுகுவர்த்தி ஏற்றி வழிபாட்டில் ஈடுபட்டிருந்தனர்.

குறித்த பிரார்த்தனை நிகழ்வில், கத்தோலிக்க திருச்சபை, அங்கிலிக்கன் மிஷன் இலங்கை திருச்சபை, தென்னிந்திய திருச்சபை, மெதடிஸ்த திருச்சபை, பப்ரிஸ் திருச்சபை ஊழியர்கள் மற்றும் திருச்சபை மக்களும் பங்கு கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

வெள்ளோட்டத்துக்கு முன்னர் நடந்த விபரீதம்!

Pagetamil

மசாஜ் நிலைய பெண்கள் இருவருக்கு எயிட்ஸ்: கலக்கத்தில் வாடிக்கையாளர்கள்!

Pagetamil

கிராண்ட்பாஸில் தீப்பற்றிய டயர் கடை!

Pagetamil

வவுனியாவில் சடலமாக மீட்கப்பட்ட இளம் யுவதி!

Pagetamil

யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம்

Pagetamil

Leave a Comment