31.3 C
Jaffna
March 28, 2024
முக்கியச் செய்திகள்

ஜனாதிபதி பதவிவிலக மாட்டார்: அரசாங்கம் அறிவிப்பு!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலக மாட்டார் என அரசாங்கத்தின் பிரதம கொறடா ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

இன்றைய பாராளுமன்ற அமர்வில் உரையாற்றிய அமைச்சர், நாட்டின் 6.9 மில்லியன் பிரஜைகள் ஜனாதிபதிக்கு வாக்களித்துள்ளனர் என்றார்.

  “பொறுப்பான அரசாங்கம் என்ற முறையில், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நாம் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷ தனது பதவியை இராஜினாமா செய்ய மாட்டார்” என அமைச்சர் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

தற்போதைய தேசிய நெருக்கடியை அரசாங்கம் எதிர்கொள்ளும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார ஆற்றிய உரைக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் பெர்னாண்டோ இதனைத் தெரிவித்துள்ளார்.

இதற்கு நளின் பண்டார பதிலளித்த போது, நாடாளுமன்றத்தில் பதற்றம் ஏற்பட்டது. சபை நடவடிக்கைகள் 10 நிமிடங்கள் ஒத்திவைக்கப்பட்டது.

What’s your Reaction?
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0
+1
1
+1
2

இதையும் படியுங்கள்

இஸ்லாம் மதத்தை இழிவுபடுத்தும் விதமாக பேசிய ஞானசாரருக்கு 4 வருட கடூழிய சிறைத்தண்டனை!

Pagetamil

கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம்: 3வது நாளாக கடும் மழைக்கு மத்தியில் போராட்டம்

Pagetamil

காசாவில் உடனடி போர் நிறுத்தத்தை கோரி ஐ.நா பாதுகாப்புசபையில் தீர்மானம்!

Pagetamil

இலங்கைக்கு பெரு வெற்றி

Pagetamil

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: மைத்திரி இன்று சிஐடியில் வாக்குமூலம்!

Pagetamil

Leave a Comment