பாராளுமன்றத்தில் நாளை (05) ஆசன மாற்றங்கள் இடம்பெறவுள்ளது.
10 பங்காளிக் கட்சிகளைச் சேர்ந்த 16 நாடாளுமன்ற உறுப்பினர்களும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 14 நாடாளுமன்ற உறுப்பினர்களும் அரசிலிருந்து விலகி சுயேச்சையான அணியாக அமரவுள்ளனர்.
இதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அதிருப்தியாளர்கள் குழுவும் சுயேச்சையாக அமர திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனடிப்படையில், நாளை அரசு மூன்றில் இரண்டு பெரும்பான்மையை இழப்பது நிச்சயமாகி விட்டது.
சாதாரண நாடாளுமன்ற பெரும்பான்மையையும் இழக்குமா என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அரசின் பெரும்பான்மையை இல்லாமலாக்கி, ஆட்சியை கவிழ்க்கும் முயற்சியில் விமல் வீரவன்ச, உதய கம்மன்பில உள்ளிட்ட குழுவினர் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1