Pagetamil
இந்தியா

கைலாசாவிலும் கைவரிசை காட்டும் நித்தி: வெளிநாட்டு சிஷ்யை பாலியல் புகார்!

நித்தியானந்தா தனக்குப் பாலியல் தொந்தரவு அளித்ததாக வெளிநாட்டு சிஷ்யை ஒருவர் இ-மெயில் மூலமாக கர்நாடக போலீஸாரிடம் புகார் அளித்துள்ளார்.

நித்தியானந்தா பாலியல் புகார், ஆள் கடத்தல் வழக்குகள் எனப் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிப் பிரபலமானவர். சாமியராக எவ்வளவு அறியப்பட்டாரோ, அதைவிட, குற்றச்செயல்களாலேயே அதிகம் அறியப்பட்டுள்ளார். தியான பீடத்தின் நிறுவனரான இவர்மீது ஏராளமான பாலியல் புகார்கள் நிலுவையில் இருக்கின்றன.

வழக்கு விசாரணைகளிற்கு பயந்த நித்தியானந்தா, இந்தியாவிலிருந்து தப்பியோடி தற்போது கைலாசா என்கிற தனி நாட்டை உருவாக்கி, அங்கு தனது சீடர்களுடன் வசித்துவருவதாகக் கூறப்படுகிறது. தலைமறைவாக இருக்கும் அவர், அவ்வப்போது வீடியோக்களை வெளியிட்டுவருகிறார்.

இந்த நிலையில், வெளிநாட்டுப் பெண் ஒருவர் பெங்களூரில் உள்ள பிடதி போலீஸாருக்கு இ-மெயில் மூலம் நித்தியானந்தா குறித்துப் புகார் அனுப்பியிருக்கிறார்.

அதில் அவர், கைலாச நாட்டிலுள்ள நித்தியானந்தாவும் அவருடைய சீடர்களும், தனக்கும் அங்குள்ள பெண்களுக்கும் பாலியல் தொந்தரவு அளித்ததாகக் குறிப்பிட்டிருக்கிறார்.

இதற்கு பிடதி போலீஸார், `இது மாதிரியான இ-மெயில் புகார்களை ஏற்றுக்கொள்ள முடியாது. அதனால், பயப்படாமல் இந்தியாவில் ஏதாவது ஒரு காவல் நிலையத்துக்கு நேரில் வந்து புகார் தெரிவியுங்கள், விசாரணை மேற்கொள்கிறோம்’ என்று பதிலளித்திருக்கின்றனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

பாலியல் வன்கொடுமை வழக்கில் அலகாபாத் ஐகோர்ட் வழங்கியது தவறான தீர்ப்பு: மத்திய அமைச்சர் அதிருப்தி

Pagetamil

‘ரூ’ என்பது பெரிதானது ஏன்? – முதல்வர் ஸ்டாலின் விளக்கம்

Pagetamil

யூடியூப் பார்த்து தங்கம் கடத்த கற்றுக்கொண்டேன்: நடிகை ரன்யா ராவ் வாக்குமூலம்

Pagetamil

ரன்யா ராவ் தங்கக் கடத்தல் வழக்கை அமலாக்கத் துறை விசாரிக்கிறது: சிஐடி விசாரணையை திரும்ப பெற்ற கர்நாடக அரசு

Pagetamil

சீமான் வீட்டுக் காவலர், பணியாளருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது உயர் நீதிமன்றம்!

Pagetamil

Leave a Comment