29.8 C
Jaffna
March 29, 2024
இலங்கை

அமெரிக்க அரசியல் விவகார துணைச் செயலாளர் விக்டோரியா நுலண்ட் இன்று இலங்கை வருகிறார்!

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அரசியல் விவகாரங்களுக்கான பிரதிச் செயலாளர் விக்டோரியா நுலண்ட் இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று இலங்கை வரவுள்ளார்.

துணைச் செயலாளர் நுலண்ட் அமெரிக்க வெளியுறவுத்துறையில் பிராந்திய மற்றும் இருதரப்பு கொள்கை சிக்கல்களை மேற்பார்வையிடுகிறார்.

தனது விஜயத்தின் போது, ​​துணைச் செயலாளர் நுலண்ட், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் மற்றும் வெளிவிவகார செயலாளர் ஜயநாத் கொலம்பகே ஆகியோரை சந்திக்க உள்ளார்.

அமைச்சர் பீரிஸ் மற்றும் துணைச் செயலாளர் நுலண்ட் ஆகியோர் இணைந்து நாளை வெளிவிவகார அமைச்சில் இலங்கை-அமெரிக்க பங்காளித்துவ பேச்சுவார்த்தையின் 4வது அமர்வுக்கு தலைமை தாங்கவுள்ளனர்.

மேலும், துணைச் செயலாளர் நுலண்ட் கொழும்பு துறைமுகத்திற்கு விஜயம் செய்து வர்த்தக சமூகம் மற்றும் சிவில் சமூகத்தினரை சந்திக்க உள்ளார்.

இலங்கை-அமெரிக்க கூட்டாண்மை உரையாடல் கடந்த 2019 ஆம் ஆண்டு வாஷிங்டன் டிசியில் நடைபெற்றது.

இருதரப்பு உறவுகளை மீளாய்வு செய்வதற்கும் இலங்கைக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான ஒத்துழைப்பையும் பங்காளித்துவத்தையும் மேலும் வலுப்படுத்துவதற்கான வழிகளை ஆராயவும் பங்காளித்துவ உரையாடல் ஒரு முக்கியமான தளமாகும் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவிச் செயலாளர் டொனால்ட் லூ மற்றும் இந்தோ-பசிபிக் பாதுகாப்பு விவகாரங்களுக்கான பிரதான துணைப் பாதுகாப்புச் செயலாளர் அமண்டா டோரி ஆகியோர் இந்த விஜயத்தில் துணைச் செயலாளர் நுலண்டுடன் வருகை தரவுள்ளனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

வட்டுக்கோட்டை இளைஞன் கொலை: கைதான ரௌடிகளின் தொலைபேசி உரையாடல் அறிக்கையை பெற அனுமதி!

Pagetamil

யாழ் போதனா மருத்துவ கழிவு பிரச்சினைக்கு தீர்வு: கோம்பயன் மயானத்தில் எரியூட்டி திறப்பு!

Pagetamil

கிளிநொச்சி ஆயுர் வேத வைத்தியசாலைகளில் மருந்துக்களுக்கு தட்டுப்பாடு

Pagetamil

பெரமுனவுக்கும் அதிகரிக்கும் பிளவு!

Pagetamil

ரூ.500 இலஞ்சம் வாங்கிய பொலிஸ்காரருக்கு சிறைத்தண்டனை!

Pagetamil

Leave a Comment