29.8 C
Jaffna
March 29, 2024
இலங்கை

கிளிநொச்சியில் திடீர் சுழல் காற்று: 14 குடும்பங்கள் பாதிப்பு!

கிளிநொச்சி மாவட்டத்தில் திடீர் என பலத்த காற்றுடன் கூடிய மழை காரணமாக 14 குடும்பங்களைச் சேர்ந்த 42 பேர் பாதிப்பட்டுள்ளதாக மாவட்ட இடர் முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது.

பிற்பகல் 3 மணியளவில் வானிலையில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக கடும் காற்றுடன் பலத்த மழை சில பகுதிகளில் பதிவாகியுள்ளது.

இதன் காரணமாக கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட செல்வாநகர், கிருஷ்ணாபுரம் ஆகிய பகுதிகளில் வீடுகள் பகுதியளவில் சேதம் அடைந்துள்ளது.

குறித்த காலநிலை காரணமாக செல்வாநகர் பகுதியில் 09 குடும்பங்களை சேர்ந்த 25 அங்கத்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 07 வீடுகளின் கூரை பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன் மரம் முறிந்து விழுந்ததில் முச்சக்கரவண்டி ஒன்றும் சேதமடைந்துள்ளது.

இதேவேளை கிருஷ்ணபுரம் பகுதியில் 05 குடும்பங்களை சேர்ந்த 17 அங்கத்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 05 வீடுகளின் கூரை பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக மாவட்ட இடர் முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது.

பாதிக்கப்பட்ட குடும்பங்களிற்கான இடர் கால உதவிகளை வழங்க மாவட்ட இடர் முகாமைத்துவப் பிரிவும், கரைச்சி பிரதேச செயலகமும் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ஞானசாரர் வைத்தியசாலையில்

Pagetamil

வட்டுக்கோட்டை இளைஞன் கொலை: கைதான ரௌடிகளின் தொலைபேசி உரையாடல் அறிக்கையை பெற அனுமதி!

Pagetamil

யாழ் போதனா மருத்துவ கழிவு பிரச்சினைக்கு தீர்வு: கோம்பயன் மயானத்தில் எரியூட்டி திறப்பு!

Pagetamil

கிளிநொச்சி ஆயுர் வேத வைத்தியசாலைகளில் மருந்துக்களுக்கு தட்டுப்பாடு

Pagetamil

பெரமுனவுக்கும் அதிகரிக்கும் பிளவு!

Pagetamil

Leave a Comment