தனது மகளை பாலியல் வல்லுறவிற்குள்ளாக்கிய தந்தைக்கு, 3 குற்றச்சாட்டக்களின் கீழ் ஒவ்வொரு குற்றச்சாட்டிற்கும் தலா 18 வருடங்கள் வீதம் 54 வருட கடூழிய சிறைத்தண்டனையும், 1 மில்லியன் ரூபா நட்டஈடும், 30,000 ரூபா அபராதமும் செலுத்த உத்தரவிட்டார்.
3 சிறைத்தண்டனைகளையும் அவர் சம நேரத்தில் (18 வருட சிறைத்தண்டனை) அனுபவிக்க உத்தரவிட்டார்.
ஹம்பாந்தோட்டை, சமோதகம பிரதேசத்தில் வசிக்கும் 46 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவருக்கே சிறைத்தண்டனை, அபராதம் மற்றும் நட்டஈடு விதிக்கப்பட்டுள்ளது.
குற்றஞ்சாட்டப்பட்டவர், தனது மனைவி வெளிநாட்டில் பணிபுரியும் போது குடிபோதையில் இருந்ததோடு, 01.04.2015 முதல் தனது பராயமடையாத மகளை பல சந்தர்ப்பங்களில் துஷ்பிரயோகம் செய்துள்ளார்.
தந்தையின் தொல்லை தாங்க முடியாமல் அப்பகுதியிலுள்ள சிறுவர் கழகம் ஒன்றின் பாதுகாவலரிடம் மகள் கூறியதையடுத்து, ஹம்பாந்தோட்டை பொலிஸில் சிறுமியை ஆஜர்படுத்தினர். ஹம்பாந்தோட்டை பொலிஸார், குற்றம்சாட்டப்பட்ட தந்தையை கைது செய்து ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தினர்.
பூர்வாங்க விசாரணையைத் தொடர்ந்து, சட்டமா அதிபர் குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிராக 20.05.2021 அன்று ஹம்பாந்தோட்டை மேல் நீதிமன்றத்தில் மூன்று குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்குத் தாக்கல் செய்தார்.
அதன்படி, குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை சந்தேகத்திற்கு இடமின்றி அரசுத் தரப்பு நிரூபித்ததால், குற்றம் சாட்டப்பட்டவர் மூன்று குற்றச்சாட்டுகளிலும் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டது.
இதன்படி, ஒரு குற்றச்சாட்டக்கு 18 வருடங்கள் வீதம் 3 குற்றச்சாட்டுகளின் கீழ் 54 வருட கடூழிய சிறைத்தண்டனை- அதை சம நேரத்தில் அனுபவிக்க – ஹம்பாந்தோட்டை மேல் நீதிமன்ற நீதிபதி ரஷாந்த கொடவெல தீர்ப்பளித்தார்.
மேலும், மூன்று குற்றச்சாட்டுகளுக்கும் தலா ரூ.10,000 வீதம் ரூ.30,000 அபராதமும், மேலும் சிறுமிக்கு ரூ.1 மில்லியன் ரூபா நட்டஈடு வழங்குமாறும், அபராதத்தை செலுத்தாவிடின் மேலதிக 24 மாத சிறைத்தண்டனையை அனுபவிக்குமாறும் உயர் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.