25 C
Jaffna
February 12, 2025
Pagetamil
உலகம்

ரஷ்ய ஜனாதிபதியின் நண்பரின் உல்லாசப்படகை கைப்பற்றியது இத்தாலி!

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் நெருங்கிய நண்பர் என்று நம்பப்படும் ஒருவரின் உல்லாசப் படகை இத்தாலி பறிமுதல் செய்துள்ளது.

இரும்புத் தொழில் அதிபர் அலெக்சீ மோர்டர்ஷோவ் என்பவரிற்கு சொந்தமானது அந்தப் படகு.

ஐரோப்பிய ஒன்றியம், ரஷ்யா மீதும் அந்நாட்டுடன் நெருங்கிய தொடர்புடையவர்கள் மீதும் விதிக்கும் புதிய பொருளாதார தடைகளின் அடிப்படையில் அந்தப் படகு கைப்பற்றப்பட்டது.

ரஷ்ய அரசாங்கத்துடன் நெருக்கமாக இருக்கும் பெரும் செல்வந்தர்களின் மீது ஐரோப்பிய ஒன்றியம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

கடந்த மாதம் 24ஆம் திகதி அன்று ரஷ்யா படையெடுப்பைத் தொடங்கியது முதல் ரஷ்யச் செல்வந்தர்கள் பலரின் சொத்துக்கள் முடக்கப்பட்டன.

செல்வந்தர் மோர்டர்ஷோவ் போருக்கும் தமக்கும் சம்பந்தமில்லை என்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஏன் தம்மைக் குறிவைக்கிறது என்பது புரியவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

லிபியாவில் படகு விபத்து: 16 பேர் உயிரிழப்பு, 10 பேர் மாயம்

east tamil

UPDATE : குவாடமாலா பஸ் விபத்து

east tamil

பல்லாயிரக்கணக்கான ஆமைக் குஞ்சுகளை ஆற்றில் விட்ட பிரேசில்

east tamil

ஹஜ் யாத்திரைக்கான புதிய விதிமுறைகள்

east tamil

8 வயது சிறுமியை கொன்ற ஆசிரியை கைது!

east tamil

Leave a Comment