நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் இந்திய விஜயம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
விரைவில் புதியதொரு திகதியில் அவரது இந்திய பயணம் இடம்பெறுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தியாவசிய உணவுகள் மற்றும் எரிபொருள் விநியோகத்தை சீர்செய்ய, இலங்கைக்கான நிதி ஒத்துழைப்பை இறுதி செய்ய நிதியமைச்சர் பசில் ராஜபக்ச இன்று இந்தியா பயணமாக இருந்தார்.
இந்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன் மற்றும் எஸ். ஜெய்சங்கர் ஆகியோரை சந்திக்க திட்டமிட்டிருந்தார்.
எனினும், பசிலின் பயணத்திற்கு புதிய திகதி திட்டமிடப்படவுள்ளது.
இந்தியா ஏற்கனவே எரிபொருளுக்காக 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் வரியையும், உணவுப் பொருட்கள் மற்றும் மருந்துப் பொருட்களை இறக்குமதி செய்ய 1 பில்லியன் டொலர் வசதியையும் வழங்கியுள்ளது.