25.9 C
Jaffna
March 29, 2024
குற்றம்

பெண் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்: மற்றொரு பெண் கைது!

மத்துகமவில் கடந்த 15ஆம் திகதி மூன்று பிள்ளைகளின் தாயான 39 வயது பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடை குற்றச்சாட்டில் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொலைக்கு சதித் திட்டம் தீட்டியதாக சந்தேகத்தின் பேரில் பெண் ஒருவர் இன்று (24) மாலை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பெண் மத்துகம பிரதேசத்தில் உள்ள குற்றக் கும்பல் ஒன்றின் தலைவரான ஷான் அரோஸின் மனைவி என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த பெண் அரச அமைச்சர் ஒருவரின் ஒருங்கிணைப்பு அதிகாரியாக செயற்படுவதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளதாகவும் இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்காக மத்துகம பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

விபச்சார விடுதியில் சிக்கிய 2 பெண்களுக்கு எயிட்ஸ்!

Pagetamil

மனைவியின் 15 வயது தங்கையுடன் குடும்பம் நடத்தி கர்ப்பமாக்கியவர் கைது!

Pagetamil

காதலன் பலியான 15வது நாளில் உயிர்விட்ட காதலி: உடல் பாகங்கள் தானம்!

Pagetamil

பேஸ்புக்கை ஹக் செய்து யுவதியின் நிர்வாண படம் கேட்டு மிரட்டிய இளைஞன்: சொக்லேற் வாங்கி வந்தபோது சிக்கினார்!

Pagetamil

2வது முறை சிக்கிய 19, 21 வயது யுவதிகளுக்கு விளக்கமறியல்

Pagetamil

Leave a Comment