பிலியந்தலையில் உள்ள ஊடகவியலாளர் சமுதித சமரவிக்ரமவின் வீடு தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் 26 வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
‘தாக்குதல் நடத்தியவர்கள் வந்த வாகனம் மற்றும் மோட்டார் சைக்கிளை அடையாளம் காண 80 க்கும் மேற்பட்ட சிசிடிவி கமராக்களை ஆய்வு செய்துள்ளோம். மேலும் சில காட்சிகள் மொரட்டுவ பல்கலைக்கழகத்திற்கு மேலதிக ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளது’ என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
சம்பவங்கள் தொடர்பான தகவல்களை கெஸ்பேவ நீதவான் நீதிமன்றில் தாக்கல் செய்த பொலிசார், தொலைத்தொடர்பு கோபுரங்களிலிருந்து சமிக்ஞைகளை கண்காணிப்பதற்கான உத்தரவையும் பெற்றுள்ளனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1