14 வயது 7 மாதமான சிறுமி வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டு, கர்ப்பம் தரித்த சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பதுளை, ஹாலிஎல பிரதேசத்தில் இந்த சம்பவம் நடந்தது.
சிறுமி தனக்கு வயிற்றுவலி இருப்பதாக தனது தாயிடம் கூறியதையடுத்து, ஹாலிஎல பிரதேசத்தில் உள்ள வைத்தியரிடம் சென்று பரிசோதித்த போது சிறுமி நான்கு மாத கர்ப்பிணியாக இருந்தது தெரியவந்துள்ளது.
சம்பவத்துடன் தொடர்புடைய முதலாவது சந்தேக நபர் பதுளை பிரதேசத்தைச் சேர்ந்தவர்.
சிறுமியின் தாயாருடன் அறிமுகமான அந்த நபர், உல்லாசமாக இருக்க தனக்கு ஒரு பெண் தேவையென கேட்டுள்ளார்.
இதையடுத்து, தனது மகளுடன் தொடர்பு கொள்ள அனுமதித்துள்ளார்.
இந்த நபருக்கு 41 வயது. அவருக்கு 7 வயதில் ஒரு மகனும் உள்ளார்.
இரண்டாவது சந்தேக நபரான 39 வயதுடைய நபர், அவரது வீட்டில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மூன்று பிள்ளைகளின் தந்தையான இவர் ஒரு வழிபாட்டிடத்தில் பணிபுரிகிறார். இவருக்கு 19 வயதுடைய மகளும் 16 மற்றும் 08 வயதுடைய பிள்ளைகளும் உள்ளனர்.
இவர்கள் அனைவரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பதுளை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர். இவர்களை எதிர்வரும் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பதுளை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக சிறுமியின் தாயும் கைது செய்யப்பட்டார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹாலிஎல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.