வவுனியா பல்கலைகழகம் நாளை திறந்து வைக்கப்படவுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இதில் கலந்து கொள்கிறார்.
யாழ்ப்பாணப் பல்கலைகழகத்தின் வவுனியா வளாகம், பல்கலைகழகமாக அண்மையில் தரமுயர்த்தப்பட்டது. இதன் திறப்பு விழா நாளை நடைபெறவுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பல்கலைகழகத்தை திறந்து வைப்பார்.



