தமிழில் ’கவலை வேண்டாம்’ என்ற படத்தின் மூலம் சினிமாவில் நாயகியாக அறிமுகமானவர் தான் யாஷிகா ஆனந்த். அதன்பின்னர் கௌதம் கார்த்திக் நடிப்பில் உருவான அடல்ட் காமெடி படமான ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்தில் நடித்து இளைஞர்கள் மத்தியில் பிரபலம் ஆனார். அதனைத்தொடர்ந்து துருவங்கள் பதினாறு, ஜாம்பி உள்பட பல படங்களில் நடித்து வந்தார் யாஷிகா. அந்த நேரத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் அடியெடுத்து வைத்த யாஷிகா மக்களிடையே பிரபலமானார். ஆனால் அதற்கு பிறகு சரியாக எந்த பட வாய்ப்பும் அமையவில்லை.
இந்நிலையில் சமீபத்தில் அவர் பதிவு செய்துள்ள வீடியோ ஒன்றை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அந்த வீடியோவில் யாஷிகா மலைப்பாம்பு ஒன்றை அலேக்காக தூக்கி கழுத்தில் போட்டுக்கொண்டு கூலாக போஸ் கொடுத்துள்ளார்.
இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் வழக்கம்போல் கேலி கிண்டல் மற்றும் பாராட்டுகளுடன் கூடிய தங்களது கமெண்ட்டுகளை பதிவு செய்து வருகின்றனர். ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ள இந்த வீடியோ தற்போது இணையத்தில் படு வைரலாகி வருகிறது.