ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அனுர பிரியதர்ஷன யாப்பா இன்று (8) நடைபெற்ற ஒன்பதாவது பாராளுமன்றத்தின் இரண்டாவது அமர்வில் அரசாங்க மற்றும் எதிர்க்கட்சிகளின் ஏகமனதான தீர்மானத்தின் மூலம் நிதி தொடர்பான பாராளுமன்ற குழுவின் தலைவராக மீண்டும் நியமிக்கப்பட்டார்.
ஒன்பதாவது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வில் நிதி தொடர்பான பாராளுமன்றக் குழுவிற்கும் அனுர பிரியதர்ஷன யாப்பா தலைமை தாங்கினார்.
நிதி தொடர்பான பாராளுமன்ற குழுவின் விசேட கூட்டம் இன்று (8) காலை பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் இந்த நியமனம் செய்யப்பட்டது.
இதேவேளை, பொது நிறுவனங்களுக்கான நாடாளுமன்றக் குழு (கோப்) மற்றும் பொதுக் கணக்குகளுக்கான நாடாளுமன்றக் குழு (கோபா) ஆகியவற்றின் தலைவர்கள் எதிர்வரும் நாட்களில் நியமிக்கப்படவுள்ளனர்.
அந்தக் குழுக்களுக்கும் முன்னாள் தலைவர்கள் நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக நாடாளுமன்றத் தகவல்கள் தெரிவிக்கின்றன.