26.4 C
Jaffna
March 29, 2024
உலகம் முக்கியச் செய்திகள்

புர்கினா பாசோ ஜனாதிபதி சிறைப்பிடிப்பு: அதிகாரத்தை கைப்பற்றியது இராணுவம்!

புர்கினா பாசோ நாட்டின் ஜனாதிபதி ரோச் கபோரை பதவி நீக்கம் செய்து, ஆட்சியதிகாரத்தை கைப்பற்றியதாக அந்த நாட்டு இராணுவம் அறிவித்துள்ளது.  அரசியலமைப்பை இடைநிறுத்தியதாகவும், அரசாங்கத்தையும் தேசிய சட்டமன்றத்தையும் கலைத்ததாகவும், நாட்டின் எல்லைகளை மூடிவிட்டதாகவும் இராணுவம் அறிவித்துள்ளது.

திங்களன்று லெப்டினன்ட் கேணல் பால்-ஹென்றி சண்டோகோ டமிபா கையெழுத்திட்ட மற்றும் அரச தொலைக்காட்சியில் மற்றொரு அதிகாரி வாசித்த அறிவிப்பில், கையகப்படுத்தல் வன்முறையின்றி மேற்கொள்ளப்பட்டதாகவும், தடுத்து வைக்கப்பட்டவர்கள் பாதுகாப்பான இடத்தில் இருப்பதாகவும் கூறியது.

முன்னர் கேள்விப்படாத ஒரு நிறுவனமான பேட்ரியாட்டிக் இயக்கம் பாதுகாப்பு மற்றும் மறுசீரமைப்பு அல்லது MPSR என்ற பெயரில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டது.

“இராணுவத்தின் அனைத்துப் பிரிவுகளையும் உள்ளடக்கிய எம்.பி.எஸ்.ஆர்., ஜனாதிபதி கபோரின் பதவியை இன்றுடன் நிறுத்த முடிவு செய்துள்ளது” என்று அது கூறியது.

பாதுகாப்பு நிலைமை மோசமடைந்தமை மற்றும் தேசத்தை ஒன்றிணைக்க கபோரின் இயலாமை மற்றும் நாடு எதிர்கொள்ளும் சவால்களுக்கு திறம்பட பதிலளிக்க வேண்டியுள்ளதால் ஆட்சியதிகாரத்தை கைப்பற்றிள்ளதாக இராணுவம் அறிவித்துள்ளது.

எம்.பி.எஸ்.ஆர் நியாயமான நேரத்திற்குள் அரசியலமைப்பு ஒழுங்கை மீண்டும் நிறுவும் என்றும், நாடு முழுவதும் இரவு ஊரடங்குச் சட்டம் அமல்படுத்தப்படும் என்றும் அந்த அறிக்கை கூறியது.

ஞாயிற்றுக்கிழமை இராணுவ முகாம்களில் கடுமையான துப்பாக்கிச் சூட்டு சத்தங்கள் கேட்டு, தலைநகர் Ouagadougou இல் இரண்டு நாட்கள் குழப்பம் மற்றும் அச்சத்திற்குப் பிறகு இராணுவம் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.

ஆயுதக் குழுக்களுக்கு எதிரான தமது போராட்டத்திற்கு அதிக ஆதரவை இராணுவம் கோரியுள்ளது.

ஜனாதிபதி ரோச் மார்க் கிறிஸ்டியன் கபோர் எங்கே இருக்கிறார் என்பது உடனடியாகத் தெரியவில்லை.

முன்னதாக கபோரின் நிலைமையைப் பற்றி முரண்பட்ட தகவல்கள் வெளியாகியிருந்தன. சிலர் அவர் ஆட்சிக் கவிழ்ப்பாளர்களால் தடுத்து வைக்கப்பட்டதாகக் கூறினர்இ அவருக்கு விசுவாசமான படைகள் அவரை பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் சென்றதாக இன்னொரு தகவல் கூறியது.

முன்னதாக, கபோரின் கட்சி அவர் ஒரு படுகொலை முயற்சியில் இருந்து தப்பியதாகக் கூறியது, ஆனால் எந்த விவரங்களையும் தெரிவிக்கவில்லை. முன்னதாக திங்களன்று கபோரின் இல்லத்திற்கு அருகில் கவச வாகனங்கள் காணப்பட்டன.

கபோரின் இருப்பிடம் பற்றிய முரண்பாடான அறிக்கைகளைத் தொடர்ந்து, ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுக் கொள்கைத் தலைவர் ஜோசப் பொரெல் ஒரு அறிக்கையில், “ஜனாதிபதி கபோர் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருப்பதை இப்போது நாங்கள் அறிவோம்.” என தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் தலைவர் அன்டோனியோ குட்டெரெஸ் ஒரு அறிக்கையில், “ஆயுத பலத்தால் அரசாங்கத்தை கைப்பற்றும் முயற்சியை வன்மையாகக் கண்டிக்கிறேன்”, நிகழ்வுகளை “சதிப்புரட்சி” என்று அழைத்தார்.

“ஜனாதிபதி கபோர் மற்றும் பிற அரசு அதிகாரிகளை உடனடியாக விடுவிக்க வேண்டும் மற்றும் பாதுகாப்புப் படைகளின் உறுப்பினர்கள் புர்கினா பாசோவின் அரசியலமைப்பு மற்றும் சிவில் தலைமைக்கு மதிப்பளிக்க வேண்டும்” என்று அமெரிக்கா அழைப்பு விடுத்துள்ளது என்று வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் நெட் பிரைஸ் செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்தார்.

“இந்த சூழ்நிலையில் அனைத்து தரப்பினரையும் அமைதியாக இருக்குமாறும், குறைகளைத் தீர்ப்பதற்கான ஒரு வழிமுறையாக உரையாடலை நாடுமாறும் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்” என்று பிரைஸ் கூறினார்.

இராணுவம் வெளியிட்ட அறிக்கைக்கு முன், ஆபிரிக்க ஒன்றியம் மற்றும் மேற்கு ஆபிரிக்க கூட்டமைப்பு ECOWAS இரண்டும் புர்கினா பாசோவில் நடந்தது சதிப்புரட்சி என்று குறிப்பிட்டதுடன், அதனை கண்டித்து, கபோரின் பாதுகாப்பிற்கு இராணுவத்தையே பொறுப்பாக்குவதாகக் கூறினர்.

புர்கினா பாசோ

புர்கினா பாசோ தங்க உற்பத்திக்குக்கு பெயர்போன நாடாகஇருந்த போதிலும், மேற்கு ஆபிரிக்காவின் ஏழ்மையான நாடுகளில் ஒன்றாகும். 1960 இல் பிரான்சில் இருந்து சுதந்திரம் பெற்றதிலிருந்து ஏராளமான ஆட்சிக்கவிழ்ப்புகளை சந்தித்து விட்டது.

ஜனாதிபதி கபோ 2015 முதல் ஆட்சியில் இரு;கிறார். 2020 இல் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

புர்கினா பாசோவின் தலைதூக்கியுள்ள ஆயுதக் குழுக்களால் பொதுமக்கள் மற்றும் இராணுவத்தினர் கொல்லப்படுவது நாட்டில் அச்சத்தையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியதுடன், அவரது நிர்வாகத்தின் மீதான அதிருப்தி மக்களிடம் அதிகரித்தது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1

இதையும் படியுங்கள்

4 ஆம் திகதி மைத்திரியை நீதிமன்றத்தில் வாக்குமூலமளிக்க உத்தரவு!

Pagetamil

இஸ்லாம் மதத்தை இழிவுபடுத்தும் விதமாக பேசிய ஞானசாரருக்கு 4 வருட கடூழிய சிறைத்தண்டனை!

Pagetamil

நாயகியின் உயிரைக் காத்த காதல் சின்னம்!: 21 கோடி ரூபாய்க்கு ஏலம் போன ‘டைட்டானிக்’ மரக்கதவு

Pagetamil

கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம்: 3வது நாளாக கடும் மழைக்கு மத்தியில் போராட்டம்

Pagetamil

ஜூலியன் அசாஞ்சேவுக்கு மரண தண்டனை விதிக்க கூடாது: அமெரிக்க அரசிடம் உத்தரவாதம் கோரும் பிரிட்டிஷ் நீதிமன்றம்

Pagetamil

Leave a Comment