30.2 C
Jaffna
April 28, 2024
இலங்கை

அரசின் வேலைத்திட்டங்களால் ஆளுந்தரப்பு குடும்பங்களிற்கும், சில அமைச்சர்களிற்குமே மகிழ்ச்சி!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் சமர்ப்பிக்கப்பட்ட அரசாங்கத்தின் கொள்கை அறிக்கை மீதான ஒத்திவைப்பு வேளை விவாதத்தின் இரண்டாம் நாள் இன்று காலை ஆரம்பமாகவுள்ளது.

பாராளுமன்றம் காலை 10 மணிக்கு கூடவுள்ளது.

9வது பாராளுமன்றத்தின் இரண்டாவது அமர்வை அரசாங்கத்தின் கொள்கை அறிக்கையை வழங்கி ஜனாதிபதி ராஜபக்ஷ செவ்வாய்கிழமை சம்பிரதாயபூர்வமாக அறிவித்தார்.

பாராளுமன்றம் நேற்று பிற்பகல் 1 மணி முதல் மாலை 6 மணி வரை கூடிய போது கொள்கை அறிக்கை மீது எம்பிக்கள் விவாதம் நடத்தினர்.

நாளையும் ஒத்திவைப்பு விவாதம் தொடரும்.

அரசாங்கத்தின் பசுமைக் கொள்கை முன்னோக்கி கொண்டு செல்லப்படும் என ஜனாதிபதி அண்மையில் வெளியிட்ட அறிக்கையினால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தின் போது உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் கருணாதிலக, ஜனாதிபதி தனது உரையின் போது தனது பசுமைக் கொள்கையானது மக்களுக்கு சரியாக தெரிவிக்கப்படாததால் அது நடைமுறைக்கு வரவில்லை என்று கூறினார்.

எவ்வாறாயினும், உர மானியத்தை குறைப்பதற்காகவே பசுமைக் கொள்கை என்ற கருத்து அறிமுகப்படுத்தப்பட்டது என்பதை கிராமிய மக்கள் அறிவார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் கருணாதிலக சுட்டிக்காட்டினார்.

பல ஆண்டுகளாக நாட்டுக்காக சேவையாற்றும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை, இந்தியா மற்றும் சீனாவின் ஆதரவைப் பெற வேண்டும் என்ற அரசின் கொள்கை அழித்து வருகிறது என்பது தெளிவாகிறது.

தற்போது பொதுமக்களுக்கு மூன்று வேளை உணவு வாங்க முடியாத நிலைமையேற்பட்டுள்ளது.

சட்டமா அதிபர் திணைக்களம், நீதித்துறை மற்றும் பொலிஸாருக்கு சுதந்திரமாக செயற்படுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

பொலிஸ் சேவையின் வினைத்திறனை அரசாங்கம் மேம்படுத்தியுள்ளதாக கூறப்படுகின்ற போதிலும், காஸ் கசிவுகளுக்கு காரணமானவர்களோ அல்லது தரமற்ற உரத்தை இறக்கிய நபர்களோ சட்டத்தின் முன் நிறுத்தப்படவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் கருணாதிலக சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, விவாதத்தின் போது உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார், விவாதத்தின் போது சபையில் பிரசன்னமாகியிருந்த அரசாங்க உறுப்பினர்களின் எண்ணிக்கையானது அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தின் மீதான நம்பிக்கையை உறுதிப்படுத்துவதாக தெரிவித்தார்.

அரசாங்கத்தின் செயற்பாடுகளால் அரசாங்கத்தின் பின்வரிசை உறுப்பினர்கள் அதிருப்தியடைந்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் மரிக்கார் தெரிவித்துள்ளார்.

வரலாற்றில் முதன்முறையாக, நாட்டின் அன்னிய செலாவணி கையிருப்பு 1 பில்லியன் அமெரிக்க டாலருக்கும் கீழே குறைந்துள்ளதாகவும், தற்போது அரசாங்கம் தனது பிழைப்புக்காக தங்க இருப்புக்களை விற்பனை செய்வதாகவும் அவர் கூறினார்.

தங்கத்தை அடகு வைத்து விற்று பிழைக்கும் நாடாக இலங்கை மாறியுள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் மரிக்கார் தெரிவித்தார்.

ஆளும் குடும்பத்திற்கு வெளியே அரசாங்கத்தின் தற்போதைய வேலைத்திட்டத்தில் சில அமைச்சர்கள் மட்டுமே மகிழ்ச்சியடைந்துள்ளனர் என்று அவர் கூறினார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

நீரை சிக்கனமாக பயன்படுத்துங்கள்: கிளிநொச்சி மக்களுக்கு அறிவிப்பு!

Pagetamil

வடக்கில் தகுதியற்றவர்களுக்கு பதவி வழங்கி கல்வியை அழிக்க முயற்சி: ஜேவிபி சந்திரசேகரன் குற்றச்சாட்டு!

Pagetamil

40 வயது காதலனால் சுடப்பட்ட 17 வயது சிறுமி பலி

Pagetamil

கிளிநொச்சியில் 4Kg தங்கக்கட்டியுடன் கைது செய்யப்பட்ட பெண்கள்!

Pagetamil

அச்சுவேலியில் வீடு புகுந்து தாக்குதல்

Pagetamil

Leave a Comment