யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு நாகர்கோவிலில் சிறுவர்களுக்கான பட்டப் போட்டி நேற்று (14) இடம் பெற்றது.
நாகர்கோவில் நாகேஸ்வரா விளையாட்டு கழக மைதானத்தில் பிற்பகல் 4.00 மணிக்கு இடம் பெற்ற போட்டியில் ஒன்பது பட்டங்கள் போட்டியில் பங்கு கொண்டன.
நாகர்கோவில் கிராமத்தில் முதல் தடவையாக இடம்பெற்ற இப் பட்டப் போட்டியில் முதலாம் பரிசான ரூபா 5000/- இவை அருந்தவராசா மதுஷா எனும் சிறுமி பெற்றுக் கொண்டதுடன் ,இரண்டாம் இடத்தினை பெற்று 3000/- ரூபா பணப் பரிசினை சவுந்தர்ராஜன் சந்துரு பெற்றுக் கொண்டார், மூன்றாம் இடத்தினை பெற்று ரூபா 2000/ பண பரிசினை யோகநாதன்,நிரூஜன் பெற்றுக் கொண்டார்.
இதே வேளை ஏழு போட்டியாளர்களுக்கான ஆறுதல் பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
இப் பட்டப் போட்டியின் நடுவராக தொழிலதிபர் ரகு கடமையாற்றினார். பரிசுகளை அவர், பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினரும் போட்டி ஏற்பாட்டாளருமான ஆ.சுரேஸ்குமார் ஆகியோர் வழங்கி வைத்தனர்.
இப் பட்டப் போட்டியினை பார்வையிடுவதற்க்காக நாகர்கோவில் பகுதியில் இருந்து, சுமார் நாநூறு பேர் வரை கலந்து கொண்டிருந்தமை குறிப்பிட தக்கது.