இந்தோனேசியாவின் ஜாவா தீவில் இன்று பிற்பகல் 6.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. தலைநகர் ஜகார்த்தாவிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது. அங்கு வசிப்பவர்கள் பலரும் அச்சத்தில் கட்டிடங்களை விட்டு வெளியேறியதை அவதானிக்க முடிந்தது.
இந்தோனேசியாவின் வானிலை ஆய்வு மையம் சுனாமியை ஏற்படுத்தும் சாத்தியம் இல்லை என்று கூறியுள்ளது.
இதேவேளை, இலங்கைக்கு சுனாமி அச்சுறுத்தல் எதுவும் இல்லை எனவும், கரையோரப் பகுதிகள் பாதுகாப்பாக உள்ளதாகவும் இலங்கை தேசிய சுனாமி முன்னெச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.
இந்தோனேஷியா “பசிபிக் ரிங் ஒஃப் ஃபயர்” என்று அழைக்கப்படும், அதிக நில அதிர்வு ஏற்படும் வலயத்தில் உள்ளது, அங்கு பூமியின் மேலோட்டத்தில் உள்ள வெவ்வேறு தட்டுகள் சந்திக்கின்றன. அதிக எண்ணிக்கையிலான பூகம்பங்கள் மற்றும் எரிமலைகளை உருவாக்குகின்றன.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1