இன்று இதுவரை 584 நபர்கள் COVID-19 தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கை 590,063 ஆக அதிகரித்துள்ளது.
இவர்களில் 12 நபர்கள் சமீபத்தில் வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பியவர்கள் என அடையாளம் காணப்பட்டனர்.
முன்னதாக கடந்த 24 மணித்தியாலத்தில் 145 பேர் கொரோனா வைரஸிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியதையடுத்து, இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 561,557 ஆக உயர்ந்துள்ளது.
13,423 நபர்கள் தற்போது கொரோனா வைரஸுக்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
நேற்றைய தினம் 18 கொவிட் தொடர்பான மரணங்கள் பதிவாகியுள்ளதோடு, இலங்கையின் வைரஸ் இறப்பு எண்ணிக்கை 15,083 ஆக அதிகரித்துள்ளது.
பலியானவர்களில் 12 ஆண்களும் 6 பெண்களும் அடங்குவர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1