இராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட .சுசில் பிரேமஜயந்த இன்று (4) காலை அமைச்சுக்குச் சென்று தமக்குக் கிடைத்த உத்தியோகபூர்வ கார் மற்றும் பொருட்களை திருப்பிக் கொடுத்தார்.
உத்தியோகபூர்வ வாகனத்தை கையளித்துவிட்டு, முன்னாள் இராஜாங்க அமைச்சர் தனது பாதுகாவலருடன் முச்சக்கர வண்டியில் வீடு திரும்பியதை காணமுடிந்தது.
“வாகனங்களை ஒப்படைத்துவிட்டு நான் முச்சக்கர வண்டியில் வீட்டுக்குச் செல்கிறேன். மீண்டும் நீதிமன்றத்திற்கு போய் வேலை வாங்கிக் கொண்டு கார் வாங்குகிறேன்.
அவை திருடப்படாதவை” என சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1