நேற்று கிளிநொச்சிக்கு விஜயம் செய்திருந்த நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க, பல அரசியல் பிரமுகர்களையும் சந்தித்திருந்தார்.
கிளிநொச்சியில் நேற்று தமிழர் விடுதலைக்கூட்டணியின் செயலாளர் வீ.ஆனந்தசங்கரியை சந்தித்து கலந்துரையாடியிருந்தார். காலை 11 மணியளவில் கிளிநொச்சியில் அமைந்துள்ள தமிழர் விடுதலைக்கூட்டணி அலுவகலத்தில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் தலைவருமான முருகேசு சந்திரகுமாரை மதியம் 12 மணிக்கு சந்தித்து பேசினார்.
கிளிநொச்சியிலுள்ள தனியார் விடுதியொன்றில் இந்த சந்திப்பு நடந்தது. இதன்போது, அந்த கட்சியின் பிரமுகர்களும், பிரதேச சபை உறுப்பினர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
What’s your Reaction?
+1
+1
1
+1
+1
+1
+1
+1