பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடையதாகக் குற்றம் சாட்டப்பட்ட பாதாள உலகக் குழு உறுப்பினர் கெசல்வத்த பவாஸ், கெசல்வத்தை பழைய யோன் வீதியில் வைத்து படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
நேற்று இரவு மோட்டார் வாகனத்தில் வந்த குழுவொன்று, இறந்தவரை துரத்திச் சென்று கூரிய ஆயுதங்களால் வெட்டிக் கொன்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கெசல்வத்த பவாஸ் இதற்கு முன்னர் வேறு குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
சந்தேக நபர்களை கண்டுபிடிப்பதற்காக பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1