Pagetamil
இலங்கை

எரிவாயு விவகாரத்தால் பாடசாலை முறை பாதிக்கப்படும்!

எரிவாயு கசிவு வெடிப்புச் சம்பவங்கள் காரணமாக பாடசாலை முறை பாதிக்கப்படும் என கல்வி சாரா ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.

கண்டியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அந்த சங்கத்தின் பிரதம செயலாளர் அஜித் கே திலகரத்ன, எரிவாயு சிலிண்டர்களை பயன்படுத்தும் பாடசாலைகள் பல உள்ளன. பாடசாலை ஆய்வகங்கள், வீட்டு அறிவியல் ஆய்வகங்கள் மற்றும் பாடசாலை விடுதிகள் போன்ற இடங்களில் எரிவாயு பயன்படுத்தப்படுவதால் இது ஆபத்தை ஏற்படுத்துகிறது என்றார்.

ஏறக்குறைய 5,500  பாடசாலைகள் எரிவாயு சிலிண்டர்களைப் பயன்படுத்துகின்றன என்று அவர் கூறினார். எரிவாயு கசிவு வெடிப்பு ஏற்பட்டால், பாடசாலை கட்டிடங்கள் மற்றும் மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள்.

ஆய்வகங்களில் இரசாயன எதிர்வினைகள் மற்றும் வாயு கசிவு வெடிப்பு மிகவும் மோசமான சூழ்நிலையை உருவாக்கும் என்று திலகரத்ன குறிப்பிட்டார்.

இதையும் படியுங்கள்

ஊழியர்களால் ‘கூ’ காட்டி விரட்டப்பட்ட ரூபாவாஹினி பணிப்பாளர், துணைப்பணிப்பாளர்!

Pagetamil

769 வழித்தட தனியார் போக்குவரத்து வழமைக்கு திரும்பியது

Pagetamil

நல்லூர் அசைவ உணவத்தை மூடக் கோரி மகஜர்

Pagetamil

தங்கமுலாம் பூசிய துப்பாக்கி: 2 பெண்கள் கைது!

Pagetamil

யாழில் திடீர் வீதி மறியலில் ஈடுபட்ட 769 வழித்தட தனியார் பேருந்து குழுவினர்

Pagetamil

Leave a Comment