நேற்று 747 தொறற்றாளர்கள் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து நாட்டில் உறுதிப்படுத்தப்பட்ட COVID-19 தொற்றாளர்களின் எண்ணிக்கை 563,267 ஆக உயர்ந்துள்ளது.
நேற்றைய தொற்றாளர்ளில், 745 பேர் புத்தாண்டு கோவிட்-19 கொத்தணியுடன் இணைக்கப்பட்டுள்ளனர், அதே நேரத்தில் வெளிநாட்டிலிருந்து வந்த இரண்டு நபர்களும் நேற்று வைரஸுக்கு சாதகமாக சோதனை செய்தனர்.
8,899 பேர் தற்போது நாடு முழுவதும் உள்ள பல மருத்துவமனைகளில் கொரோனா வைரஸுக்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
நேற்று, COVID-19 இலிருந்து குணமடைந்த 10,378 பேர் மருத்துவமனைகளில் இருந்து வெளியேறினர். இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 540,040 ஆக உயர்ந்தது.
தொற்று சந்தேகத்தில் 2,258 பேர் தற்போது மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர்.
இதேவேளை, நேற்றைய தினம் மேலும் 23 கொரோனா வைரஸ் தொடர்பான இறப்புகள் இலங்கையில் உறுதிசெய்யப்பட்டதையடுத்து, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14,328 ஆக அதிகரித்துள்ளது.