கோதுமை மாவின் விலை நேற்று முன்தினம் முதல் 17 ரூபாய் 50 சதத்தினால் அதிகரித்துள்ளமையை பிறிமா நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.
டொலர் பிரச்சினை காரணமாக கோதுமை மா இறக்குமதி மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அதன் காரணமாக சந்தையில் கோதுமை மா தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. நாட்டில் இரண்டு பிரதான நிறுவனங்கள் கோதுமை மா விநியோகத்தை முன்னெடுக்கின்றன.
பாண் தயாரிப்பிற்கு பயன்படுத்தப்படும் கோதுமை நேற்று முன்தினம் முதல் 17 ரூபா 50 சதத்தினாலும், ஏனைய உணவு பொருட்களுக்கான மாவின் விலை 130 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளன.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1