29.5 C
Jaffna
April 19, 2024
கிழக்கு முக்கியச் செய்திகள்

கிண்ணியா படகு விபத்தில் காயமடைந்த மேலுமொரு சிறுமி உயிரிழப்பு!

கிண்ணியா குறிஞ்சாக்கேணி இழுவைப்படகு விபத்தில் மேலும் ஒரு சிறுமி உயிரிழந்துள்ளதாக கிண்ணியா பொலிசார் தெரிவித்தனர்

கடந்த (23) கிண்ணியா குறிஞ்சாக்கேணி இழுவைப்படகு விபத்தில் பாடசாலை மாணவர்கள் உள்ளடங்களாக 6பேர் உயிரிழந்த நிலையில் 18பேர் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 12 பேர் வீடுதிரும்பினார்

மேலதிக சிகிச்சைக்காக ஒருவர் கிளிநொச்சி வைத்தியசாலையிலும் மேலுமொரு சிறுமி திருகோணமலை வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வந்த நிலையில் முஹம்மது றபீஸ் பாத்திமா நிபா (06வயது) என்ற சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்

இவ்வாறு உயிரிழந்த சிறுமியின் உடல் திருகோணமலை தள வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் இன்றைய தினம் பெற்றோர்களிடம் கையாளிக்கப்படவுள்ளதாக வைத்தியசாலை பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்

மேலும் உயிரிழந்த சிறுமியின் தாயாரும் விபத்துக்குள்ளான இழுவை படகில் பயணித்ததாகவும் அவர் கிண்ணியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பியவர் என்பதுடன் இவ் படகு விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 07 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

-திருகோணமலை ரவ்பீக் பாயிஸ்-

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1

இதையும் படியுங்கள்

ஈரானுக்குள் இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதல்!

Pagetamil

புலிகள் கடத்தல்காரர்கள்: உலமா கட்சி தலைவர் உளறல்!

Pagetamil

திருகோணமலையையும், கிழக்கையும் தமிழர்கள் இழந்தது சம்பந்தனின் அரசியலாலேயே: க.வி.விக்னேஸ்வரன்!

Pagetamil

24வது நாளாக கல்முனை மக்கள் போராட்டம்!

Pagetamil

சாய்ந்தமருது மாலை நேர கடைகளில் சோதனை : டேஸ்ட் கடைகளில் புற்றுநோயை உண்டாக்கும் தன்மை கொண்ட சுவையூட்டிகள் கூட கண்டுபிடிப்பு!

Pagetamil

Leave a Comment