31.3 C
Jaffna
March 28, 2024
முக்கியச் செய்திகள் விளையாட்டு

ஐசிசி தகுதிச்சுற்றில் பங்கேற்கும் இலங்கை மகளிர் அணியில் 7 பேருக்கு கொரோனா தொற்று!

புதிய COVID-19 மாறுபாடான Omicron பரவல் உள்ள நாடுகளில் ஒன்றான சிம்பாவேயில் நடந்த ஐசிசி உலகக் கோப்பை தகுதிச் சுற்றுப் போட்டியில் கலந்து கொண்டுள்ள இலங்கை மகளிர் அணியின் 6 வீராங்கனைகள் உள்ளிட்ட 7 பேருக்கு கொரொனா தொற்று உறுதியாகியுள்ளது.

தென்னாபிரிக்காவில் புதிய COVID-19 வகை கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சிம்பாப்வே உட்பட பல ஆபிரிக்க நாடுகளுடனான விமான போக்குவரத்திற்கு பல நாடுகள் கட்டுப்பாடுகள் விதித்தன.

இதையடுத்து, சிம்பாவேயில் நடந்த உலகக்கிண்ண தகுதிச்சுற்று தொடரை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இடைநிறுத்தியது.

தொற்றிற்குள்ளாகாத இலங்கை மகளிர் அணியினர் டுபாய் வழியாக இலங்கை திரும்புவார்கள். தொற்றுக்குள்ளானவர்களும், சுற்றுப்பயணத்தில் இருக்கும் மருத்துவரும் எதிர்மறை சோதனை செய்யும் வரை அங்கேயே இருப்பார்கள்.

இலங்கை நேற்று மேற்கிந்திய தீவுகள் அணியுடன் விளையாட இருந்தது, ஆனால் கடைசி நிமிடத்தில் இலங்கை அணி ஊழியர் ஒருவர் நேர்மறை சோதனை செய்ததால் இது நிறுத்தப்பட்டது.

இலங்கை மற்றும் மேற்கிந்தியத் தீவுகளுக்கு இடையிலான போட்டி இரத்து செய்யப்பட்டதற்கு இலங்கை மகளிர் அணியின் துணைப் பணியாளர் ஒருவர் தொற்றுக்குள்ளாகியதே காரணம்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

இஸ்லாம் மதத்தை இழிவுபடுத்தும் விதமாக பேசிய ஞானசாரருக்கு 4 வருட கடூழிய சிறைத்தண்டனை!

Pagetamil

கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம்: 3வது நாளாக கடும் மழைக்கு மத்தியில் போராட்டம்

Pagetamil

குஜராத்தை வீழ்த்தி 2வது வெற்றியை பதிவு செய்தது சிஎஸ்கே!

Pagetamil

காசாவில் உடனடி போர் நிறுத்தத்தை கோரி ஐ.நா பாதுகாப்புசபையில் தீர்மானம்!

Pagetamil

இலங்கைக்கு பெரு வெற்றி

Pagetamil

Leave a Comment