27.6 C
Jaffna
March 29, 2024
இலங்கை

டிங்கர் லசந்த பொலிசாரின் சூட்டில் பலி

பல கொலைகள் மற்றும் குற்றச்செயல்களுடன் தொடர்புடையதாக கூறப்படும் டிங்கர் லசந்த என்றழைக்கப்படும் லுணுவிலகே லசந்த, வடக்கு களுத்துறை, டயகமவில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார்.

மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுதங்களை தேடிச் சென்ற போது, அவர் பொலிசார் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாகவும், இதையடுத்து பொலிசாரின் பதில் தாக்குதலில் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிக்வெல்லவில் சன்சைன் சுதா படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பிரதான சந்தேகநபரான லசந்த மாத்தறையை வசிப்பிடமாகக் கொண்டவர். அவர் கொலைகள் உட்பட 13 குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர் சன்சைன் சுத்தாவை சுட பயன்படுத்திய துப்பாக்கி, பொலிஸாருடன் சென்று தேடும் போது களுத்துறை வடக்கு டயகம பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

வெள்ளோட்டத்துக்கு முன்னர் நடந்த விபரீதம்!

Pagetamil

மசாஜ் நிலைய பெண்கள் இருவருக்கு எயிட்ஸ்: கலக்கத்தில் வாடிக்கையாளர்கள்!

Pagetamil

கிராண்ட்பாஸில் தீப்பற்றிய டயர் கடை!

Pagetamil

வவுனியாவில் சடலமாக மீட்கப்பட்ட இளம் யுவதி!

Pagetamil

யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம்

Pagetamil

Leave a Comment