29.7 C
Jaffna
April 19, 2024
இலங்கை

பருத்தித்துறை நகரசபை கூண்டோடு தனிமைப்படுத்தப்பட்டது!

நேற்று முன்தினம் இடம் பெற்ற பருத்தித்துறை நகரசபையின் 2022 ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட அமர்வில் கலந்து கொண்ட பருத்தித்துறை நகர சபை தவிசாளர், உறுப்பினர்கள், மற்றும் இரண்டு உத்தியோகத்தர்கள் என 16 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

பருத்தித்துறை நகரசபை வரவு செலவு திட்டம் நேற்று இடம்பெற்றது.

இதில் கலந்து கொள்ள வந்த தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் ஒருவர் சுகயீனமடைந்த நிலையில் காணப்பட்டார். அவர் மாடிப்படியேற சிரமப்பட்ட நிலையில், சக உறுப்பினர்கள் இருவர், அவரை கைத்தாங்கலாக மாடிக்கு அழைத்து வந்தனர்.

வாக்கெடுப்பின் பின்னர் அவரது உடல்நிலை மேலும் மோசமாகியிருந்தது.

இதையடுத்து, கதிரையொன்றில் அவரை உட்கார வைத்து, கீழே தூக்கி வந்து, வாகனமொன்றில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவருக்கு தொற்று உறுதியானது.

இதையடுத்து, நேற்றைய தினமே பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவினரால், தொற்றுக்குள்ளானவருடன் நெருங்கிய தொடர்புபட்ட 2 உறுப்பினர்களை வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டனர்.

இன்று, பருத்தித்துறை நகரசபை தலைவர் மற்றும் 10 உறுப்பினர்கள், நகரசபை 3 உத்தியோகத்தர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

புங்குடுதீவில் மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் மீட்பு!

Pagetamil

யாழில் விசக்கடிக்கு ‘பார்வை பார்த்தவர்’ பலி

Pagetamil

வடக்கு மாகாணத்தில் காணி உறுதிப்பத்திரங்களை கைமாற்றும் நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தம்

Pagetamil

இராணுவம் தேர் இழுத்த கோயில் சர்ச்சை: அச்சுவேலி மத்திய விளையாட்டு கழகத்தின் விளக்கம்!

Pagetamil

உலகின் 6 வது பெரிய தங்கத்திருட்டு: கனடா விமான நிலைய கொள்ளையில் இலங்கைத்தமிழரும் கைது!

Pagetamil

Leave a Comment