இலங்கை

வவுனியாவில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சிறுவனிற்கு கொரோனா!

வவுனியா, பாவற்குளத்தில் தாயுடன் நீராடச் சென்ற நிலையில் மரணமடைந்த சிறுவனுக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

வவுனியா, சூடுவெந்தபுலவு பகுதியில் தனது தாயுடன் பாவற்குளத்திற்கு நீராடச் சென்றிருந்த நிலையில் 4 வயது சிறுவன் நீரில் மூழ்கி மரணமடைந்த நிலையில் நேற்று மாலை வவுனியா வைத்தியசாலையில் அவரது உடல் ஒப்படைக்கப்பட்டிருந்தது.

குறித்த சிறுவனின் உடலில் மேற்கொள்ளப்பட்ட பிசீஆர் பரிசோதனையின் முடிவுகள் இன்று (24) வெளியாகிய நிலையில் மரணமடைந்த சிறுவனுக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி குறித்த உடலை அடக்கம் செய்ய சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

உலகின் 6 வது பெரிய தங்கத்திருட்டு: கனடா விமான நிலைய கொள்ளையில் இலங்கைத்தமிழரும் கைது!

Pagetamil

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

Pagetamil

இலங்கையிலுள்ள பழங்கால ஒலிபெருக்கி சாதனங்களை கடத்தும் இந்தியர்கள்!

Pagetamil

இலங்கையில் ஒருவரின் மாதாந்த அடிப்படை தேவை செலவு ரூ.16,975

Pagetamil

ரூ.1900 கொத்துக்கடை உரிமையாளருக்கு பிணை!

Pagetamil

Leave a Comment