இலங்கை

கனடாவில் சுமந்திரனின் கூட்ட மண்டபத்திற்கு எதிரில் தமிழர்கள் போராட்டம்!

கனடாவிற்கு தனிப்பட்ட பயணமாக சென்றுள்ள இலங்கை தமிழ் அரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எம்.ஏ.சுமந்திரன், இரா.சாணக்கியன் ஆகியோர் நேற்று அங்குள்ள சிலருடன் சந்திப்பில் ஈடுபட்டனர்.

இதன்போது, இன்னும் சிலர் இருவரது வருகைக்கும் எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஸ்காபரோ நகரில் உள்ள மண்டபம் ஒன்றில் நேற்று (20) சந்திப்பு நடந்தது. மண்டபத்திற்கு வெளியில் ஒன்று கூடியவர்கள், சுமந்திரன் மற்றும் சாணக்கியனிற்கு எதிராக கோசமிட்டனர்.

அத்துடன், நிகழ்வை ஏற்பாடு செய்த கனடிய தமிழரை மண்டபத்திற்கு வெளியே வருமாறு போராட்டக்காரர்கள் அழைத்த போதும், அவர் வெளியே வரவில்லை.

அண்மையில் அமெரிக்காவிற்கு சுமந்திரன் தரப்பு சென்ற பின்னர், கனடா, பிரித்தானியாவிற்கு தனிப்பட்ட பயணங்களை மேற்கொள்வது குறிப்பிடத்தக்கது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

அழகிகளிடம் இலஞ்சம் வாங்கிய பொலிஸ் அதிகாரி கைது!

Pagetamil

அச்சுவேலி வர்த்தக நிலையத்தில் தீ

Pagetamil

மக்கள் பிரதிநிதிகளுக்கே இந்நிலை என்றால் மக்களின் நிலையை எண்ணிப்பாருங்கள்: சந்திரகுமார் கண்டனம்

Pagetamil

லிட்ரோ 12.5Kg சிலிண்டரின் விலை குறைகிறது!

Pagetamil

கட்டுநாயக்க விமான நிலையத்தில் விமானத்திலிருந்து தவறி விழுந்து பயணி பலி

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!