முக்கியச் செய்திகள்

இலங்கையில் புதிய டெல்டா பிறழ்வு அடையாளம் காணப்பட்டது: வடக்கிலும் பரவுகிறது!

இலங்கையில் மற்றுமொரு டெல்டா திரிபு ண்டறியப்பட்டுள்ளது என்று இலங்கை ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தின் ஒவ்வாமை, நோயெதிர்ப்பு மற்றும் உயிரணு உயிரியல் துறையின் தலைவர் டொக்டர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.

புதிய டெல்டா திரிபிற்கு B.1.617.2.104 என பெயரிடப்பட்டுள்ளது.

இலங்கையில் ஏற்கனவே பி.1.617.2.287  வகை திரிபு கண்டறியப்பட்டது. இதற்கு மேலதிகமாக புதிய திரபு கண்டறியப்பட்டுள்ளது.

சமீபத்திய மரபணு பகுப்பாய்வு அறிக்கை இன்று சுகாதார அமைச்சிடம் சமர்ப்பிக்கப்பட்டது, அங்கு இலங்கையைச் சேர்ந்த டெல்டா திரிபு அடையாளம் காணப்பட்டுள்ளது.

இந்த திரிபு பெரும்பாலும் வடக்கு, வட மத்திய மற்றும் தென் மாகாணங்களில் இருந்து பதிவாகியுள்ளது.

டெல்டா பிறழ்வு சந்தேக மாதிரிகள் ஹொங்கொங்கில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டு, திரிபு உறுதி செய்யப்பட்டது.

தற்போது, இலங்கையில் 3 வகை கொரோனா வைரஸ்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. SARS-CoV-2 வைரஸின் பரம்பரையாக, முதலில் பரவிய B.411, மற்றும் டெல்டா பிறழ்வுகளான B.1.617.2.104, B.1.617.2.287 ஆகியவையே அவையாகும்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1

இதையும் படியுங்கள்

திருகோணமலையையும், கிழக்கையும் தமிழர்கள் இழந்தது சம்பந்தனின் அரசியலாலேயே: க.வி.விக்னேஸ்வரன்!

Pagetamil

முன்னாள் அமைச்சர் பாலித தெவரப்பெரும மின்சாரம் தாக்கி பலி

Pagetamil

இஸ்ரேலுக்குள் ஏவுகணை, ட்ரோன் தாக்குதல்: பதிலடியை ஆரம்பித்தது ஈரான்!

Pagetamil

தமிழ் பொதுவேட்பாளர்: தென்னிலங்கை சக்திகளின் சதியா?

Pagetamil

பொதுவேட்பாளர் இவர்தான்: யாழில் விக்னேஸ்வரனின் ஏற்பாட்டில் எடுக்கப்பட்ட அதிர்ச்சி முடிவு!

Pagetamil

Leave a Comment