ஐக்கிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் தற்போதைய அரசாங்கத்தின் நடவடிக்கைகளிற்கு எதிராக போராட்டம் ஒன்று இன்று பிற்பகல் 2 மணிக்கு கொழும்பு ஹைட் பார்க் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, உரத் தட்டுப்பாடு, அரச சொத்துக்களை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்பனை செய்தல் மற்றும் அரசாங்த்தின் ஏனைய நடவடிக்கைகளுக்கு எதிராக இந்தப் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
உரம், வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, பொருட்களின் விலையேற்றம் உள்ளிட்ட விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.
அரசாங்கம் மக்களின் குறைகளை பரிசீலிக்கத் தவறிவிட்டதாகக் குற்றம் சுமத்தியுள்ள பாராளுமன்ற உறுப்பினர் அத்தநாயக்க, மக்களைப் பாதுகாக்கும் பொறுப்பு அரசாங்கத்திற்கு இருப்பதாகவும் தெரிவித்தார்.
எனவே, அரசாங்கத்தின் செயலற்ற தன்மைக்கு எதிராக குரல் எழுப்பும் வகையில் இன்று கொழும்பில் அரசுக்கு எதிரான போராட்டத்தை நடத்தவுள்ளதாகவும், இன்றைய போராட்டத்தை நடத்துவதற்கு பல்வேறு குழுக்கள் தடைகளையும் ஆட்சேபனைகளையும் எழுப்ப முயற்சிப்பதாகவும், இதுபோன்ற நடவடிக்கைகளால் எதிர்க்கட்சிகள் படிப்படியாக செயல்படாது என்றும் அவர் கூறினார்.
மக்கள் மத்தியில் கொரோனா வைரஸை பரப்புவதை மையமாக வைத்து போராட்டம் நடத்தப்படுகிறது என்ற கருத்தை பரப்ப அரசு முயற்சித்து வருவதாகவும் அவர் கூறினார்.
இன்று ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ளும் அனைத்து நபர்களும் சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றுமாறு கோரப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் அத்தநாயக்க தெரிவித்தார். மக்களின் குரலை நசுக்க அரசாங்கம் கொரோனா வைரஸைப் பயன்படுத்துகிறது என்று அவர் குற்றம் சாட்டினார்.
கோவிட்-விதிமுறைகளை மீறும் முயற்சியில் கவனம் செலுத்துவதாகக் கூறி, போராட்டத்தை தடுப்பதற்கு உத்தரவிடுமாறு கோரி அரசாங்கம் நேற்று பல நீதிமன்றங்களுக்குச் சென்றதாக பாராளுமன்ற உறுப்பினர் அத்தநாயக்க தெரிவித்தார்.
நீதிமன்றங்கள் அனைத்து கோரிக்கைகளையும் நிராகரித்ததாகவும், பொதுக்கூட்டங்கள் மற்றும் போராட்டங்களில் சட்டரீதியான தடைகள் எதுவும் இல்லை என்பதை எடுத்துரைத்ததாகவும் குறிப்பிட்டார்.
அனைத்து சுகாதார வழிகாட்டுதல்களின்படி போராட்டம் நடத்தப்படும் என்று அவர் உறுதியளித்தார்.