28.5 C
Jaffna
April 17, 2024
விளையாட்டு

ரி20 உலகக்கோப்பை தொடரிலிருந்து இந்தியா வௌியேற இதுதான் காரணம்: மைக்கல் வோகன் கருத்து!

இந்திய அணி ரி20 உலகக் கோப்பை போட்டியிலிருந்து வெளியேறிவிட்டது. இந்திய வீரர்கள் மனநிலையும், அணுகிய விதமும் தவறு என்று இங்கிலாந்து அணியின் முன்னாள் கப்டன் மைக்கேல் வோகன் கருத்து தெரிவித்துள்ளார்.

டுபாயில் நேற்று நடந்த ரி20 உலகக் கோப்பை போட்டியின் சூப்பர்-12 சுற்றின் குரூப்-2 பிரிவு ஆட்டத்தில் இந்திய அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது நியூஸிலாந்து அணி.

இந்த வெற்றியின் மூலம் நியூஸிலாந்து அணியின் அரையிறுதி வாய்ப்புக்கான கதவு திறக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் மட்டும் நியூஸிலாந்து வென்றுவிட்டால் அரையிறுதி ஏறக்குறைய உறுதியாகிவிடும்.

அதேசமயம், இந்திய அணியைத் தாயகத்துக்கு டிக்கெட் போட வைத்துள்ளது நியூசிலாந்து. இந்திய அணிக்கு அடுத்து 3 போட்டிகள் இருந்தாலும் அதில் வெற்றி பெற்றாலும் அரையிறுதி வாய்ப்பு முடிந்துவிட்டது. ஏறக்குறைய இந்த ரி20 உலகக் கோப்பை போட்டியிலிருந்து இந்திய அணி வெளியேறிவிட்டது. கடந்த 2007ஆம் ஆண்டு 50 ஓவர்கள் உலகக் கோப்பை போட்டிக்குப் பின் இந்திய அணிக்கு மோசமான வெளியேற்றமாக அமைந்துள்ளது.

இந்திய அணியின் தோல்வி குறித்து இங்கிலாந்து அணியின் முன்னாள் கப்டன் மைக்கேல் வோகன் ருவிற்றரில் பதிவிட்ட கருத்தில், “ரி20 உலகக் கோப்பை போட்டித் தொடரிலிருந்து இந்திய அணி வெளியே விட்டது. இந்த உலகக் கோப்பையை அணுகிய இந்திய வீரர்களின் புத்திசாலித்தனம், அணுகுமுறை, மனநிலை அனைத்தும் தவறாக அமைந்துவிட்டது. இந்திய அணியினர் 2010ஆம் ஆண்டு கிரிக்கெட்டை விளையாடினார்கள். போட்டித் தொடர் இந்திய அணியினரைக் கடந்து சென்றுவிட்டது.

நேர்மையாகச் சொல்கிறேன், வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் பல சாதனைகளை சாதித்த அளவுக்கு திறமையும், புத்திசாலித்தனமும் கொண்ட வீரர்கள் இந்திய அணியில் இருக்கிறார்கள்.

மற்ற அணிகளிடம் இருந்து அனுபவங்களை இந்திய கிரிக்கெட் எடுக்க வேண்டும். தங்கள் நாட்டு வீரர்கள் அதிகமான அனுபவங்களைப் பெறுவதற்கு உலகில் பல்வேறு நாடுகளில் நடக்கும் பிற லீக் போட்டிகளில் விளையாட நிர்வாகம் அனுமதிக்க வேண்டும்.” என தெரிவித்துள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

‘எனக்கு பதில் வேறு வீரரை செலக்ட் பண்ணுங்க’ – டுபிளெசியிடம் மேக்ஸ்வெல் வெளிப்படை!

Pagetamil

ஐபிஎல் போட்டிகளில் அதிக ஓட்டம்: பெங்களூரை புரட்டிப் போட்டது சன்ரைசஸ்!

Pagetamil

பத்திரன அபாரம்: மும்பையை வீழ்த்தியது சென்னை!

Pagetamil

பஞ்சாப்பை வீழ்த்தியது ராஜஸ்தான்!

Pagetamil

சன்ரைசஸ் அணியில் இணைக்கப்பட்ட யாழ் வீரர் வியாஸ்காந்த்!

Pagetamil

Leave a Comment