அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் குழுக்கள் மாறுபட்ட கருத்துக்களைக் கொண்டிருப்பது அசாதாரணமானது அல்ல என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
பொலன்னறுவையில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, யுகதனவி மின் உற்பத்தி நிலைய ஒப்பந்தம் தொடர்பில் பலர் தமது கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.
யுகதானவி மின் உற்பத்தி நிலையம் தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் தமது நிலைப்பாட்டை அரசாங்கத்திற்கு அறிவித்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
பொது மக்கள் தொடர்பான விடயங்கள் தொடர்பில் கூட்டணி கட்சிகள் தமது கருத்துக்களை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி சிறிசேன தெரிவித்துள்ளார்.
அமைச்சரவையின் சில தீர்மானங்களை எதிர்க்கும் குழுக்களும் முன்னைய அனைத்து அரசாங்கங்களிலும் இருந்ததாக முன்னாள் ஜனாதிபதி தெரிவித்தார்.