கல்கிசை டி சாரம் வீதியில் ஐந்து வெளிநாட்டு பெண்களும் விபச்சார விடுதியின் முகாமையாளரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று முன்தினம் (29) சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைதான வெளிநாட்டுப் பெண்கள் இந்தோனேசியப் பிரஜைகள் எனவும் முகாமையாளர் குருநாகல் பகுதியைச் சேர்ந்தவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் நேற்று (30) கல்கிசை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கல்கிசை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1