32.3 C
Jaffna
April 28, 2024
இலங்கை

வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை உப தவிசாளர் சுகயீனம் காரணமாக மரணம்

வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் உப தவிசாளர் சுகயீனம் காரணமாக இன்று (26) மரணமடைந்துள்ளார்.

வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் உப தவிசாளரான வெள்ளைச்சாமி மகேந்திரன் சுகயீனம் காரணமாக வவுனியா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே சிகிச்சை பலனின்றி அவர் மரணமடைந்துள்ளார்.

வவுனியா, கணேசபுரம் பகுதியைச் சேர்ந்த இவர் கடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் சிறிலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்ததுடன், கடந்த பாராளுமன்ற தேர்தலில் பொதுஜன பெரமுன சார்பில் வன்னி தேர்தல் தொகுதியில் போட்டியிட்டும் இருந்தார்.

இதேவேளை, வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை மாதாந்த அமர்வுக்காக கடந்த மாதம் 24 ஆம் திகதி கூடிய போது மேற்கொள்ளப்பட்ட துரித அன்டிஜன் பரிசோதனையில் உபதவிசாளர் வெள்ளைச்சாமி மகேந்திரன் அவர்களுக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டு, கோவிட் சிகிச்சைக்காக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

40 வயது காதலனால் சுடப்பட்ட 17 வயது சிறுமி பலி

Pagetamil

கிளிநொச்சியில் 4Kg தங்கக்கட்டியுடன் கைது செய்யப்பட்ட பெண்கள்!

Pagetamil

அச்சுவேலியில் வீடு புகுந்து தாக்குதல்

Pagetamil

முகமாலையில் மனித எச்சங்கள் மீட்பு!

Pagetamil

தென்கொரியாவில் தஞ்சமா?: மைத்திரி மறுப்பு!

Pagetamil

Leave a Comment