சினேகன் மற்றும் அவரின் காதல் மனைவி கன்னிகா ரவியை அழைத்து மோதிரம் அணிவித்து வாழ்த்தியிருக்கிறார் இசைஞானி இளையராஜா.
பாடலாசிரியரும், நடிகருமான சினேகன் நடிகை கன்னிகா ரவியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். மக்கள் நீதி மய்யத்தில் இருக்கும் சினேகனின் திருமணம் உலக நாயகன் கமல் ஹாசன் முன்னிலையில் நடந்தது. கமல் தாலி எடுத்துக் கொடுக்க அதை கன்னிகா கழுத்தில் கட்டினார் சினேகன்.
சினேகன், கன்னிகாவின் திருமணத்தில் இசைஞானி இளையராஜா கலந்து கொள்ளவில்லை. இந்நிலையில் சினேகன், கன்னிகாவை வரவழைத்து மோதிரம் அணிவித்து வாழ்த்து தெரிவித்துள்ளார் இளையராஜா.
அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டு தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார் சினேகன்.
இதற்கிடையே சினேகன் தன் மனைவியின் பெயரை பச்சைக்குத்தியிருக்கிறார். அந்த வீடியோவை கன்னிகா இன்ஸ்டாகிராமில் போஸ்ட் செய்தார்.
மேலும் தன் கையில் சினேகனின் பெயரை பச்சைக் குத்தியபோது எடுத்த வீடியோவையும் வெளியிட்டார் கன்னிகா.
எங்கள் திருமணத்திற்கு வர இயலாததால் எங்களை நேரில் அழைத்து மோதிரம் அணிவித்து தன் அன்பையும் வாழ்த்தையும் தெரிவித்து மகிழ்ந்த இசைஞானிக்கு நன்றிகள்🙏💐 pic.twitter.com/vDOVJQXFvo
— Snekan S (@KavingarSnekan) October 24, 2021