ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க எடுக்கப்படும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் வத்திக்கான் தனது முழு ஆதரவை வழங்கும் என்று கொழும்பு பேராயர் கர்தினால் மால்கம் ரஞ்சித்திடம் போப் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்.
கர்தினால் மால்கம் ரஞ்சித்திற்கு அனுப்பிய ஒரு கடிதத்தில், வத்திக்கான் இலங்கையின் செயல்முறையை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும், அது இலங்கை மக்களுக்கு தொடர்ந்து ஆதரவளிக்கும் என்றும் போப் அறிவித்துள்ளார்.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களை விசாரிக்க சர்வதேச தலையீடு கோரி கர்தினால் விடுத்த அழைப்புகளுக்கு பதிலளிக்கும் வகையில் இந்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
What’s your Reaction?
+1
+1
1
+1
+1
+1
+1
+1