25.9 C
Jaffna
March 29, 2024
கிழக்கு

அடித்த பொலிஸ்காரர் பணியிலிருந்து இடைநிறுத்தம்!

மட்டக்களப்பில் மோட்டார் சைக்கிளில் சென்ற இருவரை உதைத்து கன்னத்தில் அறைந்த பொலிஸ்காரர்  பணி இடைநிறுத்தப்பட்டுள்ளார்.

நேற்றிரவு நடந்த தாக்குதல் சம்பவம் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டது.

மோட்டார் சைக்கிள் சாரதியை நிறுத்தும்படி பொலிசார் உத்தரவிட்டும் மோட்டார் சைக்கிளை நிறுத்தாமல் சென்றதையடுத்து, ஆத்திரமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் தாக்குதல் நடத்தியுள்ளார்.

அந்த பொலிஸ்காரரை இடைநீக்கம் செய்ய பொது பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர உத்தரவிட்டார்.

இது குறித்து அமைச்சர் அளித்த விளக்கத்தில், விபத்து நடந்த இடத்தை பொலிஸ் உத்தியோகத்தர் அளந்து கொண்டிருந்தபோது, அதிவேகமாக வந்த மோட்டார் சைக்கிள் பொலிசாரின் அளவுநாடாவை இழுத்து சென்றது. பொலிசார் நிறுத்தக் கோரியும் நிறுத்தாமல் சென்றதால், 500 மீற்றர்கள் பொலிசார் விரட்டிச் சென்று அவர்களை பிடித்ததாக தெரிவித்துள்ளார்.

What’s your Reaction?
+1
1
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம்: 3வது நாளாக கடும் மழைக்கு மத்தியில் போராட்டம்

Pagetamil

மருதமுனை மதரஸாவில் கொடூரம்!

Pagetamil

கல்முனையில் தமிழர்களுக்கு எதிரான அநீதி: மீண்டும் வெடித்தது போராட்டம்!

Pagetamil

ஆற்றில் குதித்த திருடன்: ட்ரோன் உதவியுடன் தேடுதல்!

Pagetamil

‘மணல் கொள்ளையில் ஈடுபடாதீர்கள்’: ஐ.தே.க நிர்வாகிகளுக்கு ஆலோசனை!

Pagetamil

Leave a Comment