நாட்டில் நேற்று 151,960 பேருக்கு கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி செலுத்தப்பட்டது.
அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் 5,834 பேருக்கு வழங்கப்பட்டதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
3,969 பேருக்கு சினோபார்ம் தடுப்பூசியின் முதல் டோஸ் வழங்கப்பட்டது. 59,428 பேருக்கு இரண்டாவது சினோபார்ம் டோஸ் வழங்கப்பட்டது.
75,763 பேருக்கு பைசர் தடுப்பூசியின் முதல் டோஸூம், 786 பேருக்கு இரண்டாவது டோஸூம் வழங்கப்பட்டது.
மேலும், 6,180 பேர் மொடர்னா தடுப்பூசியின் இரண்டாவது டோஸைப் பெற்றனர்.
12,932,536 பேருக்கு இலங்கையில் முழுமையாக தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அதே நேரத்தில் நாட்டில் மொத்தம் 27,801,336 தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1