31.3 C
Jaffna
March 28, 2024
உலகம் முக்கியச் செய்திகள்

900 ஆண்டுகள் பழைமையான சிலுவைப் போர் வீரனின் வாள் கண்டுபிடிக்கப்பட்டது!

சுமார் 900 ஆண்டுப் பழைமை வாய்ந்த வாள் ஒன்று மத்தியதரைக்கடலில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அது சிலுவைப் போர் வீரருக்குச் சொந்தமானது என்று நம்பப்படுகிறது.

இஸ்ரேலுக்கு அப்பால் உள்ள கடலில் முக்குளிப்பாளர் ஒருவரால் அந்த வாள் கண்டெடுக்கப்பட்டது.

இந்த வாள் 900 ஆண்டுகளுக்கு முன்பு புனித நிலத்திற்கு பயணம் செய்து, சிலுவைப் போரில் ஈடுபட்ட ஒரு குதிரை வீரருக்கு சொந்தமானது என்று நம்பப்படுகிறது,

பண்டைய துறைமுகமான ஹைஃபா நகருக்கு அருகே உள்ள வளைவான- பாதுகாப்பான பகுதியில் இந்த வாள் மீட்கப்பட்டது. அங்கு கடலோடிகள் அடைக்கலம் பெற்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே அங்கு மதிப்பு மிக்க தொல்லியல் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன

அது பல ஆண்டுகாலமாக வணிகக் கப்பல்கள் வந்துசென்ற இடம் என்பதால் பல விலைமதிப்பற்ற தொல்பொருள் கண்டுபிடிப்புகள் இன்னும் அங்கு இருக்கக்கூடும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

ஒரு மீற்றர் நீளமுள்ள அந்த வாள் சுத்தம் செய்யப்பட்டபின் காட்சிக்கு வைக்கப்படும்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

இஸ்லாம் மதத்தை இழிவுபடுத்தும் விதமாக பேசிய ஞானசாரருக்கு 4 வருட கடூழிய சிறைத்தண்டனை!

Pagetamil

நாயகியின் உயிரைக் காத்த காதல் சின்னம்!: 21 கோடி ரூபாய்க்கு ஏலம் போன ‘டைட்டானிக்’ மரக்கதவு

Pagetamil

கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம்: 3வது நாளாக கடும் மழைக்கு மத்தியில் போராட்டம்

Pagetamil

ஜூலியன் அசாஞ்சேவுக்கு மரண தண்டனை விதிக்க கூடாது: அமெரிக்க அரசிடம் உத்தரவாதம் கோரும் பிரிட்டிஷ் நீதிமன்றம்

Pagetamil

அமெரிக்காவில் கப்பல் மோதி பாலம் இடிந்து விபத்து: நீரில் மூழ்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரம்

Pagetamil

Leave a Comment