சுமார் 900 ஆண்டுப் பழைமை வாய்ந்த வாள் ஒன்று மத்தியதரைக்கடலில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அது சிலுவைப் போர் வீரருக்குச் சொந்தமானது என்று நம்பப்படுகிறது.
இஸ்ரேலுக்கு அப்பால் உள்ள கடலில் முக்குளிப்பாளர் ஒருவரால் அந்த வாள் கண்டெடுக்கப்பட்டது.
இந்த வாள் 900 ஆண்டுகளுக்கு முன்பு புனித நிலத்திற்கு பயணம் செய்து, சிலுவைப் போரில் ஈடுபட்ட ஒரு குதிரை வீரருக்கு சொந்தமானது என்று நம்பப்படுகிறது,
பண்டைய துறைமுகமான ஹைஃபா நகருக்கு அருகே உள்ள வளைவான- பாதுகாப்பான பகுதியில் இந்த வாள் மீட்கப்பட்டது. அங்கு கடலோடிகள் அடைக்கலம் பெற்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே அங்கு மதிப்பு மிக்க தொல்லியல் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன
ஒரு மீற்றர் நீளமுள்ள அந்த வாள் சுத்தம் செய்யப்பட்டபின் காட்சிக்கு வைக்கப்படும்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
1
+1
+1
+1