29.3 C
Jaffna
March 29, 2024
முக்கியச் செய்திகள்

இந்திய மீனவர்களுக்கு எதிராக போராட்டம் நடத்துவது ஏற்புடையதல்ல!

இந்திய மீனவர்களுக்கு எதிராக போராட்டம் நடத்துவது, போர்க்கொடி உயர்த்துவது ஏற்புடையது அல்ல என, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

பேசி தீர்க்கப்பட வேண்டிய ஒரு விடயத்துக்கு தமிழக மீனவர்களுக்கு எதிரான போராட்டம் என்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று எனவும், அவர் கூறினார்.

யாழ்ப்பாணத்தில், நேற்று (19) மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் இதனை தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரைத்த அவர்,

எல்லா மீனவர்களும் எங்கே மீன்வளம் இருக்கின்றதோ அந்த மீன் வளத்தை தேடிப் போவது என்பது இயற்கையான ஒன்று.

இப்பொழுது இந்திய அரசாங்கத்துக்கு எதிராக, மீனவர்களுக்கு எதிராக போராட்டங்கள் நடத்துவது என்பது, சரியான வழிமுறை அல்ல. நாங்கள் பாரிய ஒரு போராட்டத்தை நடத்த உதவி ஒத்தாசையாக இருந்தது தமிழகம்.

‘தமிழகத்தில், இலட்சக்கணக்கான எங்களுடைய மக்கள் எதிலிகளாக போயுள்ளனர். அவர்களை பராமரிப்பது தொடக்கம் அனைத்து தேவைகளையும் தமிழக அரசே மேற்கொண்டு வருகின்றது. ஆனால் இங்கே சில அசம்பாவிதங்கள் நடப்பது என்பது உண்மை. ஆனால் அதை பேசி தீர்க்கப்பட வேண்டிய விடயங்கள். இந்திய அரசாங்கமும் இலங்கை அரசாங்கமும் ஒரு பேச்சுவார்த்தை ஊடாக தீர்வு கண்டு, சுமூகமான முறையில் மீன்பிடித் தொழிலை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்திய மீனவர்களை எமது தொழிலாளர்கள் தாக்குவது, எமது மீனவர்களை இந்திய தொழிலாளர்கள் தாக்குவது ஏற்புடைய ஒரு விடயமல்ல. தற்போதுள்ள மீன்பிடித்துறை அமைச்சரும் அவர் சார் அதிகாரிகளும் இதற்கான சூழலை ஏற்படுத்திக் கொடுக்கிறார்கள் என்று ஒரு சந்தேகம் தங்களுக்கு தோன்றுவதாகவும் கூறினார்.

‘தென்பகுதி மீனவர்கள் தங்கி நின்று மீன்பிடி நடவடிக்கையில் மேற்கொள்கின்றார்கள். அதற்கு எதிரான எந்தத் தரப்பிலிருந்தும் எந்த அரசியல்வாதியும் போராட்டங்களை மேற்கொண்டதில்லை. அதேபோல், தென் பகுதியில் இருந்து முல்லைத்தீவு மாவட்டத்தில், சிங்கள மீனவர்கள் குடியேற்றம் செய்யப்படுகின்றனர். அதற்கு எதிராக எங்களுடைய அரசியல் வாதிகள் யாராவது போராட்டம் மேற்கொண்டார்களா அவ்வாறான விடயங்கள் எதுவும் நடக்கவில்லை’ என்றும், சுரேஷ் கூறினார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

4 ஆம் திகதி மைத்திரியை நீதிமன்றத்தில் வாக்குமூலமளிக்க உத்தரவு!

Pagetamil

இஸ்லாம் மதத்தை இழிவுபடுத்தும் விதமாக பேசிய ஞானசாரருக்கு 4 வருட கடூழிய சிறைத்தண்டனை!

Pagetamil

கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம்: 3வது நாளாக கடும் மழைக்கு மத்தியில் போராட்டம்

Pagetamil

காசாவில் உடனடி போர் நிறுத்தத்தை கோரி ஐ.நா பாதுகாப்புசபையில் தீர்மானம்!

Pagetamil

இலங்கைக்கு பெரு வெற்றி

Pagetamil

Leave a Comment