பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர் திலன் பெரேரா நேற்று விபத்தில் சிக்கியுள்ளார்.
ஊவா பரணகம மற்றும் ஹாலீலவை இணைக்கும் மர பாலத்தில் பயணம் செய்தபோது அவர் கீழே விழுந்தார்.
பழைய மரப்பாலம் பாழடைந்த நிலையில் உள்ளது. அது தொடர்பில் கண்காணிக்க சென்ற போது, கீழே விழுந்துள்ளார்.
பாலத்தில் உடைந்த மரத் துண்டை மிதித்ததால், அவர் பாலத்தில் விழுந்தார்.
எனினும், பாராளுமன்ற உறுப்பினர் பாலத்திலிருந்து ஆற்றில் விழவில்லை. அவருக்கு காயமும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1